பயண நினைவுகள்
முதுமலை நினைவுகள் குடும்பத்தினரோடு ஒரு பயணம் என்பதை நடப்பிலாக்குவது சற்று கடினம்தான் ! பல நாட்களாகத் திட்டமிட்டு வந்த பயணம். பல முறைகள் என் உடல் நிலையைக் காரணம்காட்டி நான் மறுத்துக் கொண்டிருந்தேன். இறுதியில் மக்கள் எப்படியோ என்னை சம்மதிக்க வைத்துக் கூட்டிச் சென்றனர். திரும்பி வந்ததும்தான் உணர்ந்தேன் ; பயணம் என்பது - அதுவும் இதுபோன்ற இயற்கைச் சூழல்களின் இனிமை நிறைந்த இடங்களுக்குச் செல்வது என்பது எத்தனை புத்துணர்ச்சி அளிக்க வல்லது என்பதை ! அப்படிச் சென்ற ஒரு இடம்தான் முதுமலைக் காடுகள் ! சனிக்கிழமை ஜூன் 05 2019 அன்று காலை 8 மணிக்குப் புறப்படும் ரயிலில் மைசூர் சென்றடைந்தோம். முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் வண்டி ஒன்று ரயில் நிலையத்தின் வெளியே எங்களை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்தது. அங்கிருந்து மசினகுடி பயண விடுதி ஒரு 3 மணி நேரப் பயணம்.. வழியில் பந்திப்பூர் காட்டுப்பகுதியைத் தாண்டும் போது முதன் முதலில் என் கண்ணில் பட்டது புள்ளிமான்களின் கூட்டம் . ஒவ்வொன்றும் என்ன ஒரு அழகு ! இப்போதுதான் புரிந்தது ராமாயணத்து சீதை ராமனிடம் மானைப் பிடித்துத் தரச் சொன்னதன் காரணம் ! கண்ணைக